சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அண்ணனின் பிறந்த நாள் சமத்துவத் திருநாள் நிகழ்வாக அனுசரிக்கப்படுகிறது. நிகழ்வில் நிலாதம்மாவின் கலை நிகழ்ச்சி; உடன் சாவித்ரிபாய் ஆம்ஸ்ட்ராங்...
சஞ்சம் மிஸ்ரம்
நாங்க வச்ச பேரு நாக்பூர் காலா சேட்... செல்லமா ‘டான்’ன்னு கூப்டுவோம். ஜெய்பீம் என்ற ஒற்றை முழக்கத்தால் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உறவாகிப்போன நாக்பூர்காரர்.
நிலா தம்மா குடும்பத்தோடு நாக்பூர் தீக்சா பூமி பயணித்த போது எங்களுக்கு அறிமுகமாகி மூன்று வருடங்களாக அவரது வீட்டிற்கே நிலாதம்மா குடும்பத்தை விருந்தாளியாக அழைத்து உபசரித்தவர். ஒன்று இரண்டு பேரல்ல ஒவ்வொரு முறையும் 120 பேர்.
மொழி புரியாத இடத்தில் கூட சஞ்சய் மிஸ்ரம் வீட்டிற்கு வந்திருக்கிறோம் என்று சொன்னால் அங்கே கிடைக்கிற உபசரிப்பும் மரியாதையும் இன்னும் இன்னும் சிறப்பாக அமைந்திருந்திருக்கிறது. காசு வாங்காமல் இலவசமாக இறக்கி விட்டு சென்ற ஆட்டோகாரரும், லட்டு பார்சல் பண்ணி குடுத்த பேக்கரிகாரரும் என்று எங்களிடம் சொல்ல அவ்வளவு நினைவுகள் இருக்கிறது.
நாக்பூர் அருகே நடந்த கார் விபத்தில் சிக்கி தீவிர சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி மறைந்தார். அவரது இறுதிச்சடங்கில் நிலாதம்மா சார்பாக கலந்து கொண்டோம்.
2023ஆம் வருடம் மீண்டும் நாக்பூர் சென்று அவரது வீட்டின் அருகே திறக்கப்பட்டுள்ள சிலைக்கு நிலாதம்மா சார்பாக மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினோம்.
அவரது குடும்பத்தினர் தமிழகம் வரும் போதெல்லாம் நிலாதம்மா அவர்களுக்கு துணையாக உறவாக நிற்கிறது.
நீலவணக்கம் டான்... We miss you...
இந்தியத் தொல்லியல் துரையின் தந்தை சர். அலெக்சாண்டர் கன்னிங்காம்
இந்தியத் துணைக்கண்டத்தை ஆட்சி செய்த பிரிட்டிஷார், இந்தியாவைப் புரிந்து கொள்ள அதன் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அப்போது, இந்தியாவிற்கென்று ஆதாரப்பூர்வமான வரலாறு எதுவுமில்லை என்பதை உணர்ந்து வரலாற்றை கட்டமைக்க முனைந்தனர். அவ்வாறு கட்டமைக்க முனைந்தவர்களுள் ஒரு சாரார், பழங்கால கட்டிடங்கள், பொருட்கள், பதிவுகள் என்று தேடித் தேடி, இந்திய வரலாற்றைக் கட்டமைப்பதில் ஈடுபட்டனர். அப்பணியில், அவர்கள் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவர்களுக்கு உதவியாளர்களாக இருந்தவர்கள் பெரும்பாலும் வேதியப்பண்பாட்டினராக இருந்ததால், அந்த ஆய்வுகளுக்கு வேதப் பண்பாட்டுச் சாயத்தைப் பூசவே முனைந்தனர்.
இது ஒருபுறம் என்றால், பழங்கால, தொல்லியல் பொருட்கள், கட்டிடங்களைத் தேடிய இடங்கள் மிகவும் சவாலான பகுதிகளாக இருந்தன. மேலும், பிரிட்டிஷார்களுக்கு இந்திய தட்பவெப்பம் மிகப்பெரும் உடல் உபாதைகளைக் கொடுத்தது. ஆயினும், தங்களுக்கேயுரித்தான ஆர்வத்தோடு, கிட்டத்தட்ட வழக்கொழிந்த மொழிகளைக் கட்டமைப்பது, தொல்லியல் ஆய்வுக்கான முறைகளை நேர் செய்வது, அதன் மூலம் வரலாற்றைக் கட்டமைப்பது, அதனைப் பதிப்பிப்பது என்று தொடர்ந்து இயங்கி இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றில், புனைவுகளால் புதைக்கப்பட்டிருந்த ஒரு பெரும் பண்பாட்டை, ஆதாரப் பூர்வமாகக் கட்டமைத்தனர். அவ்வாறு அவர்கள் கட்டமைத்தபோது, மீட்டெடுக்கப்பட்ட பண்பாடு பௌத்தம். இத்தகைய அரும்பணியைச் செய்த பிரிட்டிஷ் அதிகாரிகளின் உழைப்புப் போற்றத்தக்கது.
![]() |
| Sir Alexander Cunningham, the father of Indian archaeology |
இதற்காக உழைத்த பல ஆங்கிலேய அதிகாரிகளுள் மிக முக்கியமானவர் சர். அலெக்சாண்டர் கன்னிங்காம் . 1861ம் ஆண்டு இந்திய அரசின் தொல்லியல் துறை ஆய்வாளராக நியமிக்கப்பட்ட அவர், பின்னாளில் இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தை ( Archaeological Survey of India ) நிறுவினார். இதன் காரணமாக அவர் இந்தியத் தொல்லியல் துரையின் தந்தை என்று போற்றப்படுகிறார். அவரின் பிறந்த நாள் 23 ஜனவரி 1814 ஆகும்.
பௌத்தத்தை மீட்டெடுக்க உதவிய அவரின் ஆய்வுகள் பல நூல்களாக வெளியிடப்பட்டன. அவற்றுள் சில தலைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- Bhilsa Topes (1854), a history of Buddhism
- The Stupa of Bharhut: A Buddhist Monument Ornamented with Numerous Sculptures Illustrative of Buddhist Legend and History in the Third Century B.C.
- Mahâbodhi, or the great Buddhist temple under the Bodhi tree at Buddha-Gaya
அமைதிக்கான நடைப்பயணம் (Walk for Peace)
அமைதிக்கான நடைப்பயணம் Walk for Peace என்ற நல்நோக்கத்தோடு நம்பிக்கை, அமைதி, அன்பு, ஒன்றுபட்ட வாழ்வு மற்றும் கருணை குறித்த விழிப்புணர்வை அமெரிக்க நாடுகள் மற்றும் உலகம் முழுவதும் பரப்புவதற்காக மரியாதைக்குரிய பெளத்த அறவணடிகள் மொத்தம் 19 பேரும், அலோகா என்ற ஒரு விசுவாசமான நாயுடன் டெக்சாஸின் ஃபோர்ட் வொர்த்திலிருந்து வாஷிங்டன், டி.சி. வரை 120 நாட்களில் 3700 கி.மீ நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்
2025ஆம் ஆண்டு அக்டோபர் 26-ல் ஃபோர்ட் வொர்த், டெக்சாஸ் ஆரம்பித்த இந்த நடைப்பயணம் டெக்சாஸ் ➜ மிசிசிப்பி ➜ ஜார்ஜியா ➜ வட கரோலினா 3700 கி.மீ கடந்து 2026 பிப்ரவரி மாதம் வாசிங்டன் டிசியில் முடிவடைய உள்ளது.
கொட்டும் மழையிலும், கடுமையான குளிரிலும் இந்த நடைப்பயணம் எங்கும் தொய்வில்லாது தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கிறது. ஜனவரி 10 இன்று 77-வது நாளாக நடந்து கொண்டே இருக்கிறார்கள்.
ஒவ்வொரு நகரத்தையும் கடக்கும் போது அரசு மரியாதையுடன் காவல்துறை வாகனங்கள் அணிவகுத்து அனுப்பி வைக்கிறது. மக்கள் ஆங்காங்கே திரண்டு நின்று பூக்களை கொடுத்து வணங்கி வாழ்த்தி தங்களால் முடிந்த பொருட்களை, உணவினை தானம் கொடுத்து வழி அனுப்பி வைக்கிறார்கள். ஆங்காங்கே தம்ம போதனைகளும், பெளத்த பூஜைகளும், சுத்தாக்களும் சொல்லப்பட்டு இந்த பயணத்தை தொடர்கின்றனர்.








