சஞ்சம் மிஸ்ரம்




நாங்க வச்ச பேரு நாக்பூர் காலா சேட்... செல்லமா ‘டான்’ன்னு கூப்டுவோம். ஜெய்பீம் என்ற ஒற்றை முழக்கத்தால் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உறவாகிப்போன நாக்பூர்காரர்.

நிலா தம்மா குடும்பத்தோடு நாக்பூர் தீக்சா பூமி பயணித்த போது எங்களுக்கு அறிமுகமாகி மூன்று வருடங்களாக அவரது வீட்டிற்கே நிலாதம்மா குடும்பத்தை விருந்தாளியாக அழைத்து உபசரித்தவர். ஒன்று இரண்டு பேரல்ல ஒவ்வொரு முறையும் 120 பேர்.

மொழி புரியாத இடத்தில் கூட சஞ்சய் மிஸ்ரம் வீட்டிற்கு வந்திருக்கிறோம் என்று சொன்னால் அங்கே கிடைக்கிற உபசரிப்பும் மரியாதையும் இன்னும் இன்னும் சிறப்பாக அமைந்திருந்திருக்கிறது. காசு வாங்காமல் இலவசமாக இறக்கி விட்டு சென்ற ஆட்டோகாரரும், லட்டு பார்சல் பண்ணி குடுத்த பேக்கரிகாரரும் என்று எங்களிடம் சொல்ல அவ்வளவு நினைவுகள் இருக்கிறது.

நாக்பூர் அருகே நடந்த கார் விபத்தில் சிக்கி தீவிர சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி மறைந்தார். அவரது இறுதிச்சடங்கில் நிலாதம்மா சார்பாக கலந்து கொண்டோம்.

2023ஆம் வருடம் மீண்டும் நாக்பூர் சென்று அவரது வீட்டின் அருகே திறக்கப்பட்டுள்ள சிலைக்கு நிலாதம்மா சார்பாக மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினோம்.

அவரது குடும்பத்தினர் தமிழகம் வரும் போதெல்லாம் நிலாதம்மா அவர்களுக்கு துணையாக உறவாக நிற்கிறது.

நீலவணக்கம் டான்... We miss you... 

No comments:

Post a Comment