இனியா - நாகராஜ் பெளத்த மகாமங்கள இணையேற்பு விழா மரக்காணம் - பாண்டிச்சேரி சாலையில் உள்ள MJR திருமண மண்டபத்தில் நடந்தது. நிலாதம்மா முன்னின்று இந்த பெளத்த பண்பாட்டு நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தியது.
நீலக்கொடியும் பெளத்தகொடியும்
சூனாம்பேட்டில் இலக்கியன் இல்லத்தில் உள்ள பகவன் புத்தர் சிலை அருகே பெளத்த கொடியும், நீலக்கொடியும் ஏற்றப்பட்டது!
பெளர்ணமி - மோர் தானம்
பெளர்ணமி தினத்தை முன்னிட்டு அசோக் நகர் புத்த விகாரின் வெளியே கோடை காலத்தை முன்னிட்டு சாலையில் வெயிலில் செல்வோருக்கு மோர் தானமாக வழங்கப்பட்டது....
புத்த பூர்ணிமா - ‘மோர்’ தானம்
சென்னை அசோக்நகர் புத்தவிகாரில் புத்த பூஜையுடன் புத்த பூர்ணிமா கொண்டாடப்பட்டது. அதே சமயத்தில் கோடை காலத்தில் சாலையில் செல்லும் பொது மக்களுக்கு நிலாதம்மா சார்பாக மோர் வழங்கப்பட்டது.
ஏப்ரல் 14
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மணிமண்டபத்தில் நிலாதம்மா சார்பாக ஓவியம் வரை குழந்தைகளுக்கு பென்சில், ஸ்கெட்ச், ஷார்ட் ஆகியவை வழங்கப்பட்டது. பின் குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டது.
திருமண வரவேற்பு
நாக்பூர் தீக்சாபூமி பயணத்தில் தொடங்கி தொடர்ச்சியாக நிலாதம்மாவோடு பயணிக்கும் தம்பி விஜி - நதியா இணையேற்பு வரவேற்பில் கலந்து கொண்டு வாழ்த்தினோம்...
நினைவு பரிசு
சென்னை பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறை ஒரு நாள் தேசிய கருத்தரங்கில் மக்களிசையான பறையை இசைத்தமைக்காக கரும்பிடாரி கலைக்குழுவினருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது
ஆன்லைன் தம்ம வகுப்பு
இலங்கையிலிருந்து மரியாதைக்குரிய பிக்கு ஆன்லைன் மூலமாக தொடர் தம்ம வகுப்பினை நிலாதம்மாவிற்கு வழங்கி வருகிறார். இந்த வார கூடுகையில் மகாமங்கள சுத்தா விளக்கம் அளித்தார்.























.jpeg)

























