சென்னை அசோக்நகர் புத்தவிகாரில் புத்த பூஜையுடன் புத்த பூர்ணிமா கொண்டாடப்பட்டது. அதே சமயத்தில் கோடை காலத்தில் சாலையில் செல்லும் பொது மக்களுக்கு நிலாதம்மா சார்பாக மோர் வழங்கப்பட்டது.
ஏப்ரல் 14
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மணிமண்டபத்தில் நிலாதம்மா சார்பாக ஓவியம் வரை குழந்தைகளுக்கு பென்சில், ஸ்கெட்ச், ஷார்ட் ஆகியவை வழங்கப்பட்டது. பின் குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டது.
திருமண வரவேற்பு
நாக்பூர் தீக்சாபூமி பயணத்தில் தொடங்கி தொடர்ச்சியாக நிலாதம்மாவோடு பயணிக்கும் தம்பி விஜி - நதியா இணையேற்பு வரவேற்பில் கலந்து கொண்டு வாழ்த்தினோம்...
நினைவு பரிசு
சென்னை பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறை ஒரு நாள் தேசிய கருத்தரங்கில் மக்களிசையான பறையை இசைத்தமைக்காக கரும்பிடாரி கலைக்குழுவினருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது
ஆன்லைன் தம்ம வகுப்பு
இலங்கையிலிருந்து மரியாதைக்குரிய பிக்கு ஆன்லைன் மூலமாக தொடர் தம்ம வகுப்பினை நிலாதம்மாவிற்கு வழங்கி வருகிறார். இந்த வார கூடுகையில் மகாமங்கள சுத்தா விளக்கம் அளித்தார்.
தலாய்லாமா - தாரகை
இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் சர்வதேச பெளத்த இளையோருக்கான கூட்டமைப்பு நிகழ்வில் மகாபிக்கு தலாய்லாமாவைச் சந்தித்து நிலாதம்மாவின் தாரகை தம்ம வாழ்த்துப் பெற்றார்...
சுத்தா - தியானப்பயிற்சி
வார இறுதி சனிக்கிழமை விகார் கூடுகையில் மகமங்கள சுத்தா பயிற்சியும், அனா பானா தியான பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டது.
தம்ம பேருரை
இலங்கையின் வந்திருந்த மரியாதைக்குரிய பெளத்த அறவணடிகள் Bhante Rohanakiththi, பல்லாவரம் பல்லவமலை புத்தவிஹாரில் தம்ம பேருரை நிகழ்த்தினார்..
நினைவேந்தல்
கல்பாக்கம் சுகுமார் அவர்களின் அம்மாவின் நினைவேந்தல் படத்திறப்பு கல்பாக்கத்தில் நடைபெற்றது. நிலாதம்மா கலந்து கொண்டு நிகழ்வை நடத்தினர்.
பிறந்தநாள்
சோபியா - விக்கிரமாதித்தன் இணையரின் குழந்தை யாழ் அகத்தியன் முதலாம் பிறந்தநாள் கொளப்பாக்கம் குறிஞ்சி தெருவில் நடைபெற்றது. நிலாதம்மா கலந்து கொண்டு முன்னின்று நிகழ்வை சிறப்பித்தது
இலங்கை பிக்கு
பெளத்த மகாமங்கள திருமணம்
பல்லவமலை புத்த விகாரில் ஸ்ரீநிதி - திலீபன் பெளத்த மகாமங்கள இணையேற்பு நடைபெற்றது. நிலாதம்மா முன்னின்று இந்த திருமணத்தை நடத்தினார்கள்.


.jpeg)



































.jpeg)





















