‘பீமின் பயணம்’ – சிறார் நூல் வெளியீட்டு விழா சென்னை நீலம் புக் நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை தாரகை தொகுத்து வழங்கினார். நிலாதம்மாவின் குழந்தைகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 💙🎈✨
172-வது தொடர் பெளர்ணமி (01-பிப்ரவரி-2026)
ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிற பெளர்ணமியை நிலாதம்மாவின் உறுப்பினர் ஒருவர் முன்னின்று நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. அந்த வகையில் இந்த மாதம் உபாசகி பிரியா முன்னின்று தொகுத்து வழங்கி நடத்தினர்.
புத்தபூஜையுடன் நிகழ்வானது தொடங்கியது. புதிதாக வந்திருப்பவர்களுக்கு நிலாதம்மாவின் பயணம் பற்றி உபாசகி கோகிலா விளக்கினார். இந்த மாத பௌர்ணமிக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார் உபாசகி அனுஷியா.
இந்த மாத பெளர்ணமிக்கு புலியந்தோப்பு மக்களிடையே வேலை செய்துவரும் கள செயற்பாட்டாளர் ராஜலக்ஷ்மி MSW படித்தவர் (Don Bosco ,social service, program manager ஆக வேலை செய்பவர்)சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது “நிலாதம்மாவின் நாக்பூர் தீக்சாபூமி பயணம் தான் எனக்கு மிகப்பெரிய அம்பேத்கரிய பார்வையை ஏற்படுத்தியது என்று கூறினார்.
பெளர்ணமி நிகழ்விற்கு வருகைபுரிந்தவர்களை வரவேற்ற பிறகு இந்த பெளர்ணமி நிகழ்விற்கு புதிதாக வந்தவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார்கள்.
கரும்பிடாரி கலைக்குழு பறையிசைத்து அம்பேத்கரிய பெளத்த பண்பாட்டு பாடல்களையும், நாடகங்களையும் நிகழ்த்திக்காட்டினர்.
புதிதாக வந்திருந்த பல்வேறு நபர்கள் தங்களுக்கு இந்த பெளர்ணமி குறித்த புரிதலை நிலாதம்மா தான் வழங்கியது. ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி நிகழ்விற்கு வருகை புரிவதற்கு முயற்சிப்பதாகச் சொன்னார்கள்.
அனைவருக்கும் இரவு உணவு தானம் வழங்கப்பட்டது.
ரோகித் வெமுலா
ரோகித் வெமுலா நிழல்களிலிருந்து நட்சத்திரங்களோடு கலந்துவிட்ட பத்தாம் ஆண்டு நினைவரங்கம் சென்னையில் நடக்கிறது. நிகழ்வின் முதல் அமர்வில் கல்வி நிலையங்களில் சாதி, மத, பாலின பாகுபாடுகள் குறித்து நிலாதம்மாவிலிருந்து சட்டக்கல்லூரி மாணவி தாரகை பேசுகிறார்...
பெளத்த மாநாடு
நவீன இந்தியாவில் பெளத்தத்தின் 70வது ஆண்டு மற்றும் உலக அமைதிக்கான பேரணி - பூர்வ பெளத்தர்கள் மாநாடு சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. நிலாதம்மா பேரணியில் கலந்து கொண்டது. மேடையில் நிலாதம்மா சார்பாக தாரகை உரையாற்றினார்.
அன்னை ரமா பிறந்தநாள்
அசோக நகர் புத்த விகாரில் அன்னை ரமாமாய் அவர்களின் பிறந்த நாள் குறித்த உரையாடலும், கூட்டு தியானம் நடைபெற்றது...
சமத்துவ திருநாள்
சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அண்ணனின் பிறந்த நாள் சமத்துவத் திருநாள் நிகழ்வாக அனுசரிக்கப்படுகிறது. நிகழ்வில் நிலாதம்மாவின் கலை நிகழ்ச்சி; உடன் சாவித்ரிபாய் ஆம்ஸ்ட்ராங்...
சஞ்சம் மிஸ்ரம்
இந்தியத் தொல்லியல் துரையின் தந்தை சர். அலெக்சாண்டர் கன்னிங்காம்
இந்தியத் துணைக்கண்டத்தை ஆட்சி செய்த பிரிட்டிஷார், இந்தியாவைப் புரிந்து கொள்ள அதன் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அப்போது, இந்தியாவிற்கென்று ஆதாரப்பூர்வமான வரலாறு எதுவுமில்லை என்பதை உணர்ந்து வரலாற்றை கட்டமைக்க முனைந்தனர். அவ்வாறு கட்டமைக்க முனைந்தவர்களுள் ஒரு சாரார், பழங்கால கட்டிடங்கள், பொருட்கள், பதிவுகள் என்று தேடித் தேடி, இந்திய வரலாற்றைக் கட்டமைப்பதில் ஈடுபட்டனர். அப்பணியில், அவர்கள் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவர்களுக்கு உதவியாளர்களாக இருந்தவர்கள் பெரும்பாலும் வேதியப்பண்பாட்டினராக இருந்ததால், அந்த ஆய்வுகளுக்கு வேதப் பண்பாட்டுச் சாயத்தைப் பூசவே முனைந்தனர்.
![]() |
| Sir Alexander Cunningham, the father of Indian archaeology |
- Bhilsa Topes (1854), a history of Buddhism
- The Stupa of Bharhut: A Buddhist Monument Ornamented with Numerous Sculptures Illustrative of Buddhist Legend and History in the Third Century B.C.
- Mahâbodhi, or the great Buddhist temple under the Bodhi tree at Buddha-Gaya
அமைதிக்கான நடைப்பயணம் (Walk for Peace)
பௌத்தக் கொடி நாள்
ஜனவரி_08 - பௌத்தகொடிநாள்
ஐந்து நிறங்களைக் கொண்ட பௌத்தக் கொடி சுமார் 60 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இக்கொடியை பௌத்த சிந்தனையாளர் கர்னல் ஹென்றி.ஸ்டீல் ஆல்காட் அவர்கள் வடிவமைத்தார். ஆல்காட் இலங்கைக்குச் சென்று பௌத்தம் குறித்த உரையாடலை நிகழ்த்தியகாலத்தில் இக்கொடி அங்கு அறிமுகமானது. ஆல்காட்டும் அனகாரிக தர்மபாலாவும் இக்கொடியை ஜப்பான் பேரரசருக்கும் பர்மா அரசுக்கும் 1889 இல் வழங்கினார்கள்.
பல திருத்தங்களுடன் உருவாக்கப்பட்ட இக்கொடி,1885 இல் கொழும்பு பௌத்தக் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து, முதன்முதலாக இலங்கை பத்திரிக்கையான ‘சரசவி சந்தரேச(sarasavi sandaresa)’யில் பிரசுரிக்கப்பட்டது. 1886 ஆண்டின் வைசாக தினத்தில் கொழும்புவில் ஏற்றப்பட்டது.
1950 மே 25 ஆம் நாள் கொழும்புவில் ‘உலக பௌத்தர்கள் அமைப்பு (World Fellowship of Buddhist)’ இலங்கையைச் சார்ந்த பௌத்த அறிஞரும், கல்வியாளருமான பேராசிரியர் குணபால பியாசேன மாலசேகரா தலைமையில் கூடியது. 27 நாடுகளிலிருந்து பௌத்தர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களும் பங்கேற்றார். குணபால பியாசேன மாலசேகரா அவர்கள், பௌத்தக்கொடியை சர்வதேச பௌத்தக்கொடியாக ஆக்க வேண்டுமென்று அந்த மாநாட்டில் பரிந்துரைத்தார். அதன்படி இக்கொடி சர்வதேச பௌத்தக்கொடியாக அங்கீகரிக்கப்பட்டது.
கொடி ஐந்து நிறப் பட்டைகளைக் கொண்டது. ஒவ்வொரு நிறமும் பௌத்த வழிமுறைகளைக் குறிப்பிடுகிறது.
1.நீல நிறம்- அன்பு, கருணை மற்றும் உலக அமைதி ஆகியவற்றைக் குறிக்கிறது.
2.மஞ்சள் நிறம்- நடுவுநிலை (மத்திம) வாழ்க்கையைக் குறிக்கிறது.
3.சிவப்பு நிறம்- ஒழுக்கம், விழிப்புணர்வு, சாதனை ஆகிவற்றுக்கான நன்முயற்சிகளைக் குறிக்கிறது.
4.வெண்மை நிறம் - மாசற்ற தம்மத்தைக் குறிக்கிறது.
5.காவி நிறம்- புத்தரின்
போதனைகளையும் ஞானத்தையும் குறிக்கிறது.
ஆறாவதாகவும் ஒரு வண்ணம் இக்கொடியில் துவக்கத்தில் இருந்தது. அது, இந்த ஐந்து நிறங்களையும் கலந்த கலைவை நிறமாக இருந்தது. பிறகு திருத்தப்பட்டக் கொடியில் ஐந்து நிறங்களே ஏற்கப்பட்டன. மேலும், ஐந்து நிறப் பட்டைகள், பஞ்ச சீலங்களையும் நினைவுபடுத்துகின்றன.
கொடியில் உள்ள ஐந்து நிறப்பட்டைகள்
செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும்
இருப்பது பௌத்தம் எங்கும், எத்திசையிலும், சமமாகப் பரவவேண்டும்
என்பதைக் குறிக்கிறது.
மார்கழியில் மக்களிசையில் அம்பேத்கரிய வினா விடைப் போட்டி!
மார்கழியில் மக்களிசை நிகழ்வில் கலந்து கொள்வோருக்கு ஒரு வினாவிடை நிகழ்வை நடத்தலாம் என்று முடிவெடுத்தோம். அதன் அடிப்படையில் 20 கேள்விகளை பண்டிதர் அயோத்திதாசர் முதல் பாபாசாகேப்பின் பௌத்தமேற்பு வரை, தொகுத்து, தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் online மூலம், பதிலளிக்கும் படியும், பதிலளித்தவர்கள், தங்களின் விடைகளையும், சரியான விடைகளையும் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த வினா விடையை வடிவமைத்தோம். இந்தக் கேள்விகளில் சில, பட்டியலின மக்களின் வரலாற்றில் உள்ள திரிபுகளை நேர் செய்யும் வகையிலும் தேர்வுசெய்யப்பட்டது.
இந்தப் போட்டியில் 20 வினாக்களுக்கும் சரியான பதிலளித்தவர்களை அழைத்து பரிசளிக்கப்பட்டது. இரு சகோதரிகளுக்கு நிலா தம்மாவின் அனுசுயா அவர்களும், மற்றவர்களுக்கு பேராசிரியர். ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களும் பரிசுகளை வழங்கினர்!





















































