அமைதிக்கான நடைப்பயணம் (Walk for Peace)

அமைதிக்கான நடைப்பயணம் Walk for Peace என்ற நல்நோக்கத்தோடு நம்பிக்கை, அமைதி, அன்பு, ஒன்றுபட்ட வாழ்வு மற்றும் கருணை குறித்த விழிப்புணர்வை அமெரிக்க நாடுகள் மற்றும் உலகம் முழுவதும் பரப்புவதற்காக மரியாதைக்குரிய பெளத்த அறவணடிகள் மொத்தம் 19 பேரும், அலோகா என்ற ஒரு விசுவாசமான நாயுடன் டெக்சாஸின் ஃபோர்ட் வொர்த்திலிருந்து வாஷிங்டன், டி.சி. வரை 120 நாட்களில் 3700 கி.மீ நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்
2025ஆம் ஆண்டு அக்டோபர் 26-ல் ஃபோர்ட் வொர்த், டெக்சாஸ் ஆரம்பித்த இந்த நடைப்பயணம் டெக்சாஸ் ➜ மிசிசிப்பி ➜ ஜார்ஜியா ➜ வட கரோலினா 3700 கி.மீ கடந்து 2026 பிப்ரவரி மாதம் வாசிங்டன் டிசியில் முடிவடைய உள்ளது.
கொட்டும் மழையிலும், கடுமையான குளிரிலும் இந்த நடைப்பயணம் எங்கும் தொய்வில்லாது தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கிறது. ஜனவரி 10 இன்று 77-வது நாளாக நடந்து கொண்டே இருக்கிறார்கள்.
ஒவ்வொரு நகரத்தையும் கடக்கும் போது அரசு மரியாதையுடன் காவல்துறை வாகனங்கள் அணிவகுத்து அனுப்பி வைக்கிறது. மக்கள் ஆங்காங்கே திரண்டு நின்று பூக்களை கொடுத்து வணங்கி வாழ்த்தி தங்களால் முடிந்த பொருட்களை, உணவினை தானம் கொடுத்து வழி அனுப்பி வைக்கிறார்கள். ஆங்காங்கே தம்ம போதனைகளும், பெளத்த பூஜைகளும், சுத்தாக்களும் சொல்லப்பட்டு இந்த பயணத்தை தொடர்கின்றனர்.

No comments:

Post a Comment