தம்மபயிற்சி முகாம்!

 "புத்தர் ஒரு மார்க்கதத்தர்" என்கிறார் பாபாசாகேப் Dr. B. R. அம்பேத்கர்.


பௌத்தம் என்பது அறிவொளி அடைவதை முன்னிறுத்துகிறது.

ஒரு பௌத்தரின் தார்மீகக் கடமை அறிவொளி அடைவதே. அதுவே புத்தர் போதித்தது.

அந்த வகையில், பௌத்ததம்மத்தைப் பயிற்சி செய்ய, தம்ம வகுப்பினை தம்மச்சாரி கௌதம் பிரபு அவர்கள் நமது நிலா தம்மா குடும்பத்தினருக்கு 30 - செப்டம்பர் மற்றும் 1 & 2 அக்டோபர் ஆகிய தேதிகளில் தம்ம பயிற்சி அளித்தார்.

அதன் தொடர்ச்சியாக, நவம்பர் 1 & 2 ஆகிய தேதிகளில் தம்ம பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

இந்த முகாமில், அனா பானா சதி பயிற்சி, தியானத்திற்கு தடையாக இருக்கும் ஐந்து விஷயங்கள், அவைகளை எவ்வாறு கடப்பது, தியானப் பயிற்சியில் செழிக்க தியானக் கையேட்டை எவ்வாறு பயன்படுத்துவது, "குலம்" ஆக இணைந்து தம்ம பயிற்சியை மேற்கொள்வது, ஒரு பௌத்தரின் தார்மீகக் கடமைகள், மேலும் பல விஷயங்கள் தம்மச்சாரி கௌதம் பிரபு அவர்களால் போதிக்கப்பட்டது.

எங்களை தம்மத்தில் செழிக்க வழிகாட்டும் தம்மச்சாரி கௌதம் பிரபு அண்ணா அவர்களுக்கு அன்பும், நன்றிகளும்!


பெளத்த மறுமலர்ச்சி தினம்


"இந்து மதத்தைச் சீர்திருத்துவது நம் களமல்ல" என்ற பாபாசாகேப் Dr. B. R. அம்பேத்கர் அவர்கள், லட்சக்கணக்கான மக்களோடு பௌத்தம் திரும்பிய நாள் இன்று. (14.10.1956)
உலக வரலாற்றில், லட்சக்கணக்கான மக்கள், எந்தவொரு அதிகாரத்திற்கும் அடிபணியாமல், சுயமாக ஒரு மதத்தினைத் தேர்வு செய்து ஏற்ற நாள் இது என்ற அளவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது!
பாபாசாகேப் Dr. B. R. அவர்களின் பாதையில் பௌத்தர்களாக மீண்டெழுவோம்!

பாபாசாகேப் பெளத்தமேற்ற தினத்தின் புகைப்படங்கள் தொகுப்பு...

















அசோக விஜயதசமி கொண்டாட்டம்

பாபாசாகேப் அம்பேத்கர் பெளத்தமேற்ற நாள்; மற்றும் மாமன்னர்  அசோகர் ஆயுதங்களை கைவிட்டு பெளத்தமேற்ற அசோக விஜயதசமி தினத்தினை புத்த பூஜையுடன் சிறுசேரி மகிழ்ச்சி இல்லத்தில் கொண்டாடினோம்.

 மரியாதைக்குரிய தம்மாச்சாரி கெளதம் பிரபு மற்றும் தம்மப் பணியில் உள்ள நாகர்ஜூனா இன்ஸ்டிடியூட் மாணவர்கள் மனீஷ் மற்றும் அஜய் கலந்து கொண்டு சுத்தாக்களை பாடி சிறப்பித்தனர்.

பூக்களால் தம்மச்சக்கரம்


புத்தருக்கு மரியாதை செலுத்துதல்





திரிரத்ன வந்தனா - புத்தபூஜா

தம்மாச்சாரி கெளதம் பிரபு

புத்தனுக்கு பூ தூவி மரியாதை


புத்தரை வணங்குதல்


22 உறுதிமொழி எடுத்துக்கொள்ளுதல்


வணக்கத்திற்குரிய பிக்கு அஸ்வகோஷ் ஐந்தாம் ஆண்டு நினைவு அஞ்சலி

 

ராணிபேட்டை மாவட்டத்தில் நந்திமங்கலம் கிராமத்தில் வணக்கத்திற்குரிய பிக்கு அஸ்வகோஷ் அவர்களின் நினைவிடத்தில் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் நடைபெற்றது. இதில் நிலா தம்மா மற்றும் ABI ஆகிய குழுக்கள் பங்கேற்று பெளத்த பூஜை நடத்தி, பிக்குவின் நினைவுகளைப் பற்றி பேசி, மதிய உணவு தானம் வழங்கி சிறப்பித்தனர்.

வணக்கத்திற்குரிய பிக்கு அஸ்வகோஷ் நினைவு  தியான மண்டபம்


குழந்தைகளோடு வணக்கத்திற்குரிய பிக்கு புத்த பிரகாஷ் கலந்துரையாடுகிறார்

சட்டக்கல்லூரி மாணவி தாரகை பிக்குவைப் பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார்

நிலாதம்மா தலைமைக்குழு உறுப்பினர் அனுசுயா பிக்கு பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார்

குழந்தைகள் திரிசரணம், பஞ்சசீலம் சொல்லி வணங்குகிறார்கள்

புத்த வந்தனா

புத்த வந்தனா

புத்த வந்தனா

புத்த வந்தனா

பிக்கு அஸ்வகோஷ், பகவன் புத்தர், பாபாசாகேப் அம்பேத்கர்

மறைந்த ஜெயராஜ் அவர்களுடைய நினைவிடத்தில்  மாலை அணிவித்து மரியாதை

ABI டிரஸ்டின் நிர்வாகி செளந்திரபாண்டியன் பிக்கு பற்றிய நினைவுகளை பகிர்கிறார்

பிக்கு புத்த பிரகாஷ் உடன் நிலாதம்மா குழந்தைகள்