Showing posts with label Dhamma retreat. Show all posts
Showing posts with label Dhamma retreat. Show all posts

தம்மபயிற்சி முகாம்!

 "புத்தர் ஒரு மார்க்கதத்தர்" என்கிறார் பாபாசாகேப் Dr. B. R. அம்பேத்கர்.


பௌத்தம் என்பது அறிவொளி அடைவதை முன்னிறுத்துகிறது.

ஒரு பௌத்தரின் தார்மீகக் கடமை அறிவொளி அடைவதே. அதுவே புத்தர் போதித்தது.

அந்த வகையில், பௌத்ததம்மத்தைப் பயிற்சி செய்ய, தம்ம வகுப்பினை தம்மச்சாரி கௌதம் பிரபு அவர்கள் நமது நிலா தம்மா குடும்பத்தினருக்கு 30 - செப்டம்பர் மற்றும் 1 & 2 அக்டோபர் ஆகிய தேதிகளில் தம்ம பயிற்சி அளித்தார்.

அதன் தொடர்ச்சியாக, நவம்பர் 1 & 2 ஆகிய தேதிகளில் தம்ம பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

இந்த முகாமில், அனா பானா சதி பயிற்சி, தியானத்திற்கு தடையாக இருக்கும் ஐந்து விஷயங்கள், அவைகளை எவ்வாறு கடப்பது, தியானப் பயிற்சியில் செழிக்க தியானக் கையேட்டை எவ்வாறு பயன்படுத்துவது, "குலம்" ஆக இணைந்து தம்ம பயிற்சியை மேற்கொள்வது, ஒரு பௌத்தரின் தார்மீகக் கடமைகள், மேலும் பல விஷயங்கள் தம்மச்சாரி கௌதம் பிரபு அவர்களால் போதிக்கப்பட்டது.

எங்களை தம்மத்தில் செழிக்க வழிகாட்டும் தம்மச்சாரி கௌதம் பிரபு அண்ணா அவர்களுக்கு அன்பும், நன்றிகளும்!