நாக்பூர் தீக்சாபூமி பயணத்தில் தொடங்கி தொடர்ச்சியாக நிலாதம்மாவோடு பயணிக்கும் தம்பி விஜி - நதியா இணையேற்பு வரவேற்பில் கலந்து கொண்டு வாழ்த்தினோம்...
நினைவு பரிசு
சென்னை பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறை ஒரு நாள் தேசிய கருத்தரங்கில் மக்களிசையான பறையை இசைத்தமைக்காக கரும்பிடாரி கலைக்குழுவினருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது
ஆன்லைன் தம்ம வகுப்பு
இலங்கையிலிருந்து மரியாதைக்குரிய பிக்கு ஆன்லைன் மூலமாக தொடர் தம்ம வகுப்பினை நிலாதம்மாவிற்கு வழங்கி வருகிறார். இந்த வார கூடுகையில் மகாமங்கள சுத்தா விளக்கம் அளித்தார்.
தலாய்லாமா - தாரகை
இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் சர்வதேச பெளத்த இளையோருக்கான கூட்டமைப்பு நிகழ்வில் மகாபிக்கு தலாய்லாமாவைச் சந்தித்து நிலாதம்மாவின் தாரகை தம்ம வாழ்த்துப் பெற்றார்...
சுத்தா - தியானப்பயிற்சி
வார இறுதி சனிக்கிழமை விகார் கூடுகையில் மகமங்கள சுத்தா பயிற்சியும், அனா பானா தியான பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டது.
தம்ம பேருரை
இலங்கையின் வந்திருந்த மரியாதைக்குரிய பெளத்த அறவணடிகள் Bhante Rohanakiththi, பல்லாவரம் பல்லவமலை புத்தவிஹாரில் தம்ம பேருரை நிகழ்த்தினார்..
நினைவேந்தல்
கல்பாக்கம் சுகுமார் அவர்களின் அம்மாவின் நினைவேந்தல் படத்திறப்பு கல்பாக்கத்தில் நடைபெற்றது. நிலாதம்மா கலந்து கொண்டு நிகழ்வை நடத்தினர்.
பிறந்தநாள்
சோபியா - விக்கிரமாதித்தன் இணையரின் குழந்தை யாழ் அகத்தியன் முதலாம் பிறந்தநாள் கொளப்பாக்கம் குறிஞ்சி தெருவில் நடைபெற்றது. நிலாதம்மா கலந்து கொண்டு முன்னின்று நிகழ்வை சிறப்பித்தது
இலங்கை பிக்கு
பெளத்த மகாமங்கள திருமணம்
பல்லவமலை புத்த விகாரில் ஸ்ரீநிதி - திலீபன் பெளத்த மகாமங்கள இணையேற்பு நடைபெற்றது. நிலாதம்மா முன்னின்று இந்த திருமணத்தை நடத்தினார்கள்.
பீமின் பயணம்’ – சிறார் நூல் வெளியீட்டு விழா!
‘பீமின் பயணம்’ – சிறார் நூல் வெளியீட்டு விழா சென்னை நீலம் புக் நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை தாரகை தொகுத்து வழங்கினார். நிலாதம்மாவின் குழந்தைகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 💙🎈✨
172-வது தொடர் பெளர்ணமி (01-பிப்ரவரி-2026)
ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிற பெளர்ணமியை நிலாதம்மாவின் உறுப்பினர் ஒருவர் முன்னின்று நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. அந்த வகையில் இந்த மாதம் உபாசகி பிரியா முன்னின்று தொகுத்து வழங்கி நடத்தினர்.
புத்தபூஜையுடன் நிகழ்வானது தொடங்கியது. புதிதாக வந்திருப்பவர்களுக்கு நிலாதம்மாவின் பயணம் பற்றி உபாசகி கோகிலா விளக்கினார். இந்த மாத பௌர்ணமிக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார் உபாசகி அனுஷியா.
இந்த மாத பெளர்ணமிக்கு புலியந்தோப்பு மக்களிடையே வேலை செய்துவரும் கள செயற்பாட்டாளர் ராஜலக்ஷ்மி MSW படித்தவர் (Don Bosco ,social service, program manager ஆக வேலை செய்பவர்)சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது “நிலாதம்மாவின் நாக்பூர் தீக்சாபூமி பயணம் தான் எனக்கு மிகப்பெரிய அம்பேத்கரிய பார்வையை ஏற்படுத்தியது என்று கூறினார்.
பெளர்ணமி நிகழ்விற்கு வருகைபுரிந்தவர்களை வரவேற்ற பிறகு இந்த பெளர்ணமி நிகழ்விற்கு புதிதாக வந்தவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார்கள்.
கரும்பிடாரி கலைக்குழு பறையிசைத்து அம்பேத்கரிய பெளத்த பண்பாட்டு பாடல்களையும், நாடகங்களையும் நிகழ்த்திக்காட்டினர்.
புதிதாக வந்திருந்த பல்வேறு நபர்கள் தங்களுக்கு இந்த பெளர்ணமி குறித்த புரிதலை நிலாதம்மா தான் வழங்கியது. ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி நிகழ்விற்கு வருகை புரிவதற்கு முயற்சிப்பதாகச் சொன்னார்கள்.
அனைவருக்கும் இரவு உணவு தானம் வழங்கப்பட்டது.












.jpeg)















































