அமைதிக்கான நடைப்பயணம் (Walk for Peace)

அமைதிக்கான நடைப்பயணம் Walk for Peace என்ற நல்நோக்கத்தோடு நம்பிக்கை, அமைதி, அன்பு, ஒன்றுபட்ட வாழ்வு மற்றும் கருணை குறித்த விழிப்புணர்வை அமெரிக்க நாடுகள் மற்றும் உலகம் முழுவதும் பரப்புவதற்காக மரியாதைக்குரிய பெளத்த அறவணடிகள் மொத்தம் 19 பேரும், அலோகா என்ற ஒரு விசுவாசமான நாயுடன் டெக்சாஸின் ஃபோர்ட் வொர்த்திலிருந்து வாஷிங்டன், டி.சி. வரை 120 நாட்களில் 3700 கி.மீ நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்
2025ஆம் ஆண்டு அக்டோபர் 26-ல் ஃபோர்ட் வொர்த், டெக்சாஸ் ஆரம்பித்த இந்த நடைப்பயணம் டெக்சாஸ் ➜ மிசிசிப்பி ➜ ஜார்ஜியா ➜ வட கரோலினா 3700 கி.மீ கடந்து 2026 பிப்ரவரி மாதம் வாசிங்டன் டிசியில் முடிவடைய உள்ளது.
கொட்டும் மழையிலும், கடுமையான குளிரிலும் இந்த நடைப்பயணம் எங்கும் தொய்வில்லாது தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கிறது. ஜனவரி 10 இன்று 77-வது நாளாக நடந்து கொண்டே இருக்கிறார்கள்.
ஒவ்வொரு நகரத்தையும் கடக்கும் போது அரசு மரியாதையுடன் காவல்துறை வாகனங்கள் அணிவகுத்து அனுப்பி வைக்கிறது. மக்கள் ஆங்காங்கே திரண்டு நின்று பூக்களை கொடுத்து வணங்கி வாழ்த்தி தங்களால் முடிந்த பொருட்களை, உணவினை தானம் கொடுத்து வழி அனுப்பி வைக்கிறார்கள். ஆங்காங்கே தம்ம போதனைகளும், பெளத்த பூஜைகளும், சுத்தாக்களும் சொல்லப்பட்டு இந்த பயணத்தை தொடர்கின்றனர்.

பௌத்தக் கொடி நாள்

 ஜனவரி_08 - பௌத்தகொடிநாள்



ஐந்து நிறங்களைக் கொண்ட பௌத்தக் கொடி சுமார் 60 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இக்கொடியை பௌத்த சிந்தனையாளர் கர்னல் ஹென்றி.ஸ்டீல் ஆல்காட் அவர்கள் வடிவமைத்தார். ஆல்காட் இலங்கைக்குச் சென்று பௌத்தம் குறித்த உரையாடலை நிகழ்த்தியகாலத்தில் இக்கொடி அங்கு அறிமுகமானது. ஆல்காட்டும் அனகாரிக  தர்மபாலாவும் இக்கொடியை ஜப்பான் பேரரசருக்கும் பர்மா அரசுக்கும் 1889 இல் வழங்கினார்கள்.

 பல திருத்தங்களுடன் உருவாக்கப்பட்ட இக்கொடி,1885 இல் கொழும்பு பௌத்தக் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து, முதன்முதலாக இலங்கை பத்திரிக்கையான சரசவி சந்தரேச(sarasavi sandaresa)’யில் பிரசுரிக்கப்பட்டது. 1886 ஆண்டின் வைசாக தினத்தில் கொழும்புவில் ஏற்றப்பட்டது.

1950 மே 25 ஆம் நாள் கொழும்புவில் உலக பௌத்தர்கள் அமைப்பு (World Fellowship of Buddhist)’ இலங்கையைச் சார்ந்த பௌத்த அறிஞரும், கல்வியாளருமான பேராசிரியர் குணபால பியாசேன மாலசேகரா தலைமையில் கூடியது. 27 நாடுகளிலிருந்து பௌத்தர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களும் பங்கேற்றார். குணபால பியாசேன   மாலசேகரா அவர்கள்பௌத்தக்கொடியை சர்வதேச பௌத்தக்கொடியாக ஆக்க வேண்டுமென்று அந்த மாநாட்டில் பரிந்துரைத்தார். அதன்படி இக்கொடி சர்வதேச பௌத்தக்கொடியாக அங்கீகரிக்கப்பட்டது.

கொடி ஐந்து நிறப் பட்டைகளைக் கொண்டது. ஒவ்வொரு நிறமும் பௌத்த வழிமுறைகளைக் குறிப்பிடுகிறது.

1.நீல நிறம்- அன்பு, கருணை மற்றும் உலக அமைதி ஆகியவற்றைக்  குறிக்கிறது.

2.மஞ்சள் நிறம்- நடுவுநிலை (மத்திம)  வாழ்க்கையைக் குறிக்கிறது.

 3.சிவப்பு நிறம்- ஒழுக்கம், விழிப்புணர்வு, சாதனை ஆகிவற்றுக்கான நன்முயற்சிகளைக்   குறிக்கிறது.

 4.வெண்மை நிறம் - மாசற்ற  தம்மத்தைக் குறிக்கிறது.

5.காவி நிறம்- புத்தரின் போதனைகளையும் ஞானத்தையும் குறிக்கிறது.

 ஆறாவதாகவும் ஒரு வண்ணம் இக்கொடியில் துவக்கத்தில் இருந்தது. அது, இந்த ஐந்து நிறங்களையும் கலந்த கலைவை நிறமாக இருந்தது. பிறகு திருத்தப்பட்டக் கொடியில் ஐந்து நிறங்களே ஏற்கப்பட்டன. மேலும், ஐந்து நிறப் பட்டைகள், பஞ்ச சீலங்களையும் நினைவுபடுத்துகின்றன.

கொடியில் உள்ள ஐந்து நிறப்பட்டைகள் செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும் இருப்பது பௌத்தம் எங்கும், எத்திசையிலும், சமமாகப் பரவவேண்டும் என்பதைக் குறிக்கிறது.


மார்கழியில் மக்களிசையில் அம்பேத்கரிய வினா விடைப் போட்டி!

மார்கழியில் மக்களிசை நிகழ்வில் கலந்து கொள்வோருக்கு ஒரு வினாவிடை நிகழ்வை நடத்தலாம் என்று முடிவெடுத்தோம்.  அதன் அடிப்படையில் 20 கேள்விகளை பண்டிதர் அயோத்திதாசர் முதல் பாபாசாகேப்பின் பௌத்தமேற்பு வரை, தொகுத்து, தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் online மூலம், பதிலளிக்கும் படியும், பதிலளித்தவர்கள், தங்களின் விடைகளையும், சரியான விடைகளையும் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த வினா விடையை வடிவமைத்தோம்.  இந்தக் கேள்விகளில் சில, பட்டியலின மக்களின் வரலாற்றில் உள்ள திரிபுகளை நேர் செய்யும் வகையிலும் தேர்வுசெய்யப்பட்டது.

இந்த வினா விடைப் போட்டியில், நிகழ்விற்கு வந்திருந்த பலரும், ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.  குழுவாக நண்பர்களோடு வந்தவர்களில் ஒரு சிலர் தங்களுக்குள் ஒரு போட்டியாக பாவித்துக்கொண்டும், மற்றும் சிலர், சேர்ந்து விவாதித்தும் பதிலளித்தனர்.  

இந்தப் போட்டியில் 20 வினாக்களுக்கும் சரியான பதிலளித்தவர்களை அழைத்து பரிசளிக்கப்பட்டது.  இரு சகோதரிகளுக்கு நிலா தம்மாவின் அனுசுயா அவர்களும், மற்றவர்களுக்கு பேராசிரியர். ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களும் பரிசுகளை வழங்கினர்!








இந்த வினா விடையை நீங்களும் முயற்சி செய்ய விரும்பினால், இந்த இணைப்புகளைச் சொடுக்கி கலந்து கொள்ளலாம்.  

தமிழில் >> https://bit.ly/ta-quiz

ஆங்கிலத்தில் >> https://bit.ly/en-quiz



திருச்சியில் பெளத்தமேற்பு மற்றும் காதணிவிழா

 திருச்சியில் அஜய் ரோஷிணி இணையரின் குழந்தைக்கு மொட்டை அடித்து, காதணி விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் அமல்தாஸ் குடும்பத்தினர் பெளத்தமேற்றனர். நிகழ்வு முடிந்து போதி விகாருக்கு சென்று புத்த பூஜை செய்து திரும்பினோம்.

பெளத்தமேற்பு


அஜய் ரோஷிணி இல்லம்

போதி விகார்



மார்கழியில் மக்களிசையில் நிலாதம்மா ஸ்டால்

 சென்னையில் நடைபெற்ற மார்கழியில் மக்களிசை நிகழ்வில் நிலாதம்மா சார்பாக ஸ்டால் போடப்பட்டிருந்தது. நிகழ்விற்கு வருகை புரிந்தவர்களுக்கு குறைவான விலையில் எளிய பாரம்பரிய உணவு விற்பனை செய்தோம். மேலும், பாபாசாகேப், புத்தர் படங்கள், கீசெயின், கப், பேனா போன்ற பொருட்களை விற்பனை செய்தோம். 

நிலாதம்மா குழந்தைகள் வண்ணங்களைக் கொண்டு முக ஓவியங்கள் வரைந்தார்கள். வருகை புரிந்தவர்களுக்கு பெளத்தம் குறித்தும், பாபாசாகேப் குறித்தும் அறிந்து கொள்ளும் விதமாக விளையாட்டுகளை ஏற்பாடு செய்திருந்தோம்.









கோரேகான் நினைவு தினம்

 

புத்தாண்டை முன்னிட்டும், கோரேகான் நினைவு தினத்தை முன்னிட்டும் பல்லாவரம் புத்தவிகாரில் நிலா தம்மா கூடுகை நடத்தி சிறப்பித்தனர்.







A quiz on Babasaheb Dr. B. R. Ambedkar

  Dr. B. R. Ambedkar Quiz

A Knowledge Initiative for Margazhiyil Makkalisai Participants

We warmly welcome the participants and audience of Margazhiyil Makkalisai to take part in a knowledge-based quiz organised by Nila Dhamma Trust.

This quiz is designed to encourage thoughtful engagement with the life, ideas, and philosophy of Babasaheb Dr. B. R. Ambedkar, with focus on caste, constitutional values, Buddhism, and the correction of commonly held misconceptions.

As Margazhiyil Makkalisai celebrates people’s culture and voices, this quiz invites you to reflect on ideas that shaped social justice, equality, and rational thought in modern India.

The quiz is available in both English and Tamil and is open to all attendees.

📘 English Quiz

Participants can access the English version of the quiz in either of the following ways:

Scan the QR Code:



Or use the direct link: https://forms.gle/k3XT6UrTs72AABM27

---


📗 தமிழ் அறிவுத் தேர்வு (Tamil Quiz)


மார்கழியில் மக்கள் இசை நிகழ்வில் பங்கேற்கும் அனைவரையும்,

டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் வாழ்க்கை, சிந்தனை மற்றும் சமூகக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கேள்வி பதில் போட்டியில்   பங்கேற்க அன்புடன் வரவேற்கிறோம்.

QR Code-ஐ ஸ்கேன் செய்து பங்கேற்கலாம்:



அல்லது, இந்த நேரடி இணைப்பைப் பயன்படுத்தலாம்: https://forms.gle/juMVbpkP1XKoVqcJ9

Quiz Overview:


* Type: Multiple Choice Questions (MCQ)

* Language: English / Tamil

* Evaluation: Automatic scoring

* Purpose: Knowledge and awareness

* Organised by: Nila Dhamma Trust


Participant details are collected **only for quiz administration and result communication**.

ராவ் பகதூர் M. C. ராஜாவும் "இந்து" அடையாளமும்!

 ராவ் பகதூர் M. C. ராஜா மீது தமிழகத்தில் ஒரு வெறுப்பரசியல் கட்டமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்தவொரு பட்டியலின ஆளுமையும் ஈவெரா பெரியார் அவர்களின் காலத்தில் இல்லை என்று நிறுவ செய்யப்பட்ட & செய்யப்படுகின்ற பிரச்சாரம், என்றால் மிகையல்ல.

ராவ் பகதூர் M. C. ராஜா அவர்களின் மீது வைக்கப்படும் வாதங்களில் முக்கியமான ஒன்று, பூனா ஒப்பந்தத்தின் போது, அவர் பாபாசாகேப் Dr. B. R. அம்பேத்கருக்கு எதிராக நின்றார் என்பதே.
ஆனால், பின்னாளில், அவர் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பாபாசாகேப்போடு பயணித்தார்.
கீழ்க்காணும் காணொளி, அவரின் கருத்தாகும்.
"இந்து கோவில்களுக்குள் நுழைய நமக்கு சுதந்திரம் இல்லையென்றால், நாம் இந்துக்கள் அல்ல, நாம் இந்துக்கள் இல்லையென்றால், ஏன் அவர்களுடன் கூட்டு வாக்காளர் தொகுதியில் சேர வேண்டும்?" என்கிறார். இது 1938ல் ராவ் பகதூர் M. C. ராஜா அவர்கள் செய்த பதிவு.




பாபாசாகேப் நினைவு நாள்

 பாபாசாகேப் நினைவு நாளில் மணிமண்டபத்தில்...

சங்கமித்திரை தேரி இலங்கையை அடைந்த பௌர்ணமி தினம்

பௌத்தப்பேரரசர் மாமன்னர் அசோகர் அவர்களின் மகளும், பிக்குணியுமான அரஹந்தர் சங்கமித்திரை தேரி பதினோரு பிக்குணிகளோடு, மஹா போதியின் பதியனிடப்பட்ட ஒரு கிளையுடனும் இன்றைய காலகட்டத்தில், டிசம்பர் மாத பௌர்ணமி தினத்தில், இலங்கையை வந்தடைய, அவரை, மாமன்னர் தேவநாம்பிய திஸ்ஸா அவர்கள், கடலில் இறங்கி கரம் கூப்பி வரவேற்றார்.  




பௌத்தப்பேரரசர் மாமன்னர் அசோகர் அவர்களின் மகனும் அரஹந்தருமான மஹேந்திர தேரர் மூலம் இலங்கையில் தம்மம் போதிக்கப்பட, அதனைத் தொடர்ந்து மஹாராணி அனுலா அவர்களைக் கொண்டு பிக்குணி சங்கத்தை நிறுவினார்.  இலங்கையின் முதல் பிக்குணியக மஹாராணி அனுலா அறியப்படுகிறார்.

சங்கமித்திரை தேரி கொண்டு வந்த மஹாபோதியின் கிளையை அனுராதபுரத்தில் நட்டனர். அந்த மஹா போதி இன்றளவும் செழித்து வளர்கிறது. யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட, உலக அளவில், மனித முயற்சியால் நடப்பட்ட மிகப்பழமையான மரம் என்ற பெருமையை பெருகிறது, இங்கு நடப்பட்ட மஹா போதி.