பௌத்தம் : மதமா, தத்துவமா, அரசியலா ...,

 "அறியப்படாத அக்டோபர் புரட்சி" என்ற தலைப்பில் 17-அக்டோபர்-2023 அன்று தமிழ் இந்து நாளிதழில் சகோ. புனித பாண்டியன் அவர்களின் கட்டுரை வெளியாகியது.  ( https://bit.ly/October_Revolution )

அதனையொட்டி, சகோ. அ. கார்ல் மார்க்ஸ் சித்தார்த்தர் ஒரு எதிர்வினையை "அம்பேத்கர் கண்ட பௌத்த "மதம்" என்ற தலைப்பில் பதிவு செய்திருந்தார். 

அந்த எதிர்வினைக்காக ஒரு பதிலையும் சகோ. புனித பாண்டியன் அவர்கள் பதிவு செய்திருந்தார்.



இந்த வாதங்களை ஒட்டி ஒரு கட்டுரையை "உள்ளதை உள்ளபடி பார்க்கப் பழகுவோம்" என்ற தலைப்பில் சகோ. ஜெயராணி அவர்கள் போதி முரசு இதழில் ஆசிரியர் பக்கக் கட்டுரை ஒன்றைப் பதிவுசெய்தார்.                                     

இந்த பதிவுகளின் தொகுப்பை வாசிக்க இந்த PDF document-டை download செய்யவும் : பௌத்தம் : மதமா, தத்துவமா, அரசியலா

பௌத்தர்களின் போர் நிறுத்தத்தை முன்னிறுத்திய ஒரு நாள் உண்ணாநிலை போராட்டம்

பௌத்தர்கள் ஒன்று கூடி போர் நிறுத்தத்தை முன்னிறுத்தி ஒரு நாள் உண்ணாநிலை போராட்டம் முன்னெடுக்கப் பட்டது. 18-நவம்பர்-2023 காலை 9:00 மணிக்கு துவங்கிய உண்ணாநிலைப் போராட்டத்தில், நிலா தம்ம குழுவினர், தமிழக சிறுபான்மையினர் குழுவின் உறுப்பினரான பிக்கு மௌரிய புத்தா, சேலம் மாவட்ட சிறுபான்மையினர் மற்றும் பிற்பட்டோர் நலக்குழு உறுப்பினர், வழக்கறிஞர் : R. K. தேவேந்திரன் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட சிறுபான்மையினர் மற்றும் பிற்பட்டோர் நலக்குழு உறுப்பினர், பிரம்மபோதி விஹாரின் பிக்கு மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாலை 5 மணியளவில் பிக்கு அவர்கள் பழச்சாறு கொடுத்து உண்ணா நிலைப்போராட்டத்தை முடித்து வைத்தார் 





புத்த பூர்ணிமாவை விடுமுறை தினமாக அறிவிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

புத்த பூர்ணிமாவை விடுமுறை தினமாக அறிவிக்க தமிழ்நாட்டிலுள்ள பல பௌத்த சங்கங்கள், பல முயற்சிகள் எடுத்து வருகின்றன.  பல சங்கங்கள், இந்தக் கோரிக்கியை தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்ஃபோன்ஸ் அவர்களிடம் வைத்தனர்.  நிலாதம்மா வைத்த கோரிக்கைகளையும் முதல்வர் அலுவலகத்துக்கு பரிந்துரை செய்த கடிதத்தின் நகல் கிடைத்தது.


விருதுநகர் மாவட்டம், மம்சாபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பாண்டியராஜ் அவர்கள் இது குறித்து தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  அந்தவகையில் வழக்கை முன்னெடுத்த சகோதரர் அவர்களுக்கு அன்பும் மகிழ்ச்சியும்.




வரும் 4-ஏப்ரல்-2023, விடுமுறையாக அறிவித்து பள்ளிகளில் இருந்து தகவல் வந்தது.  அன்றைய தினம் மஹாவீர் ஜெயந்தியாகும்.  ஆக, தமிழக அளவில் பௌத்தர்களின் மக்கட்தொகை அளவே இருந்தாலும் ஜைனர்களின் பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.


பௌத்தர்களாகிய நாம் இதனை சீர்தூக்கிப்பார்க்கவேண்டிய தருணம் ஆகும்.  


இம்மண்ணினை பண்பாட்டு அடிப்படையில் செழிப்படையச் செய்த இரு சமயங்கள் சிரமண சமயங்களான பௌத்தமும் ஜைனமுமாகும்.


பாபாசாகேப் அவர்களின் முயற்சியைத் தொடர்ந்து இம்மண்ணில் பௌத்தம் மீட்சிபெறத் தொடங்கி, சமூக வலைத்தளங்கள் வருகையால் ஸ்திரப்பட்டு வருகிறது.  தற்போதைய நம்முடைய தேவையாக, ஆங்காங்கு இயங்கி வரும் பௌத்த சங்கங்கள், ஒரு குறைந்த பட்ச செயல்திட்டத்தோடாவது ஒன்றிணைந்து இயங்கவேண்டிய காலகட்டத்தில் நாமுள்ளோம்.


ஒவ்வொரு பௌத்த சங்கமும் அவர்கள் இயங்கும் பகுதி சார்ந்த பிரச்சினைகள், சவால்கள் குறித்து இயங்கவும், குறைந்த பட்ச செயல்திட்டத்தோடு தமிழக அளவில் மற்ற சங்கங்களோடு இணைவது நம்மை வலுவாக்கவும், நமக்கான அரசியல் உரிமைகளை வென்றெடுக்கவும் வழிவகுக்கும்.

 

Buddhist group meets minorities board member

 Further to the meeting our team had with the Minority Commission member Ven Bikku Mouriyar Buddha, media coverage has been published.



Thanks to our media friend.

தமிழக அரசு பௌத்தர்களை சிறுபான்மையினர் என்று அங்கீகரித்து அரசாணை வெளியிட்டுள்ளது!

 தமிழகத்தில் உள்ள பௌத்தர்களை சிறுபான்மையினர் என்று அங்கீகரித்து "பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை" அரசாணைதனை வெளியிட்டுள்ளது.

Image of GO published by Tamil Nadu Government, recognizing Buddhists as Minority Community



இதற்காக உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அன்பும், மகிழ்ச்சியும்.


அரசாணையை அரசிதழ் அச்சக இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ள இந்த இணைப்பைச் சொடுக்கவும் >> GO of Tamil Nadu Governement recognising Buddhists as Minorities