அசோக விஜயதசமி கொண்டாட்டம்

பாபாசாகேப் அம்பேத்கர் பெளத்தமேற்ற நாள்; மற்றும் மாமன்னர்  அசோகர் ஆயுதங்களை கைவிட்டு பெளத்தமேற்ற அசோக விஜயதசமி தினத்தினை புத்த பூஜையுடன் சிறுசேரி மகிழ்ச்சி இல்லத்தில் கொண்டாடினோம்.

 மரியாதைக்குரிய தம்மாச்சாரி கெளதம் பிரபு மற்றும் தம்மப் பணியில் உள்ள நாகர்ஜூனா இன்ஸ்டிடியூட் மாணவர்கள் மனீஷ் மற்றும் அஜய் கலந்து கொண்டு சுத்தாக்களை பாடி சிறப்பித்தனர்.

பூக்களால் தம்மச்சக்கரம்


புத்தருக்கு மரியாதை செலுத்துதல்





திரிரத்ன வந்தனா - புத்தபூஜா

தம்மாச்சாரி கெளதம் பிரபு

புத்தனுக்கு பூ தூவி மரியாதை


புத்தரை வணங்குதல்


22 உறுதிமொழி எடுத்துக்கொள்ளுதல்


வணக்கத்திற்குரிய பிக்கு அஸ்வகோஷ் ஐந்தாம் ஆண்டு நினைவு அஞ்சலி

 

ராணிபேட்டை மாவட்டத்தில் நந்திமங்கலம் கிராமத்தில் வணக்கத்திற்குரிய பிக்கு அஸ்வகோஷ் அவர்களின் நினைவிடத்தில் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் நடைபெற்றது. இதில் நிலா தம்மா மற்றும் ABI ஆகிய குழுக்கள் பங்கேற்று பெளத்த பூஜை நடத்தி, பிக்குவின் நினைவுகளைப் பற்றி பேசி, மதிய உணவு தானம் வழங்கி சிறப்பித்தனர்.

வணக்கத்திற்குரிய பிக்கு அஸ்வகோஷ் நினைவு  தியான மண்டபம்


குழந்தைகளோடு வணக்கத்திற்குரிய பிக்கு புத்த பிரகாஷ் கலந்துரையாடுகிறார்

சட்டக்கல்லூரி மாணவி தாரகை பிக்குவைப் பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார்

நிலாதம்மா தலைமைக்குழு உறுப்பினர் அனுசுயா பிக்கு பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார்

குழந்தைகள் திரிசரணம், பஞ்சசீலம் சொல்லி வணங்குகிறார்கள்

புத்த வந்தனா

புத்த வந்தனா

புத்த வந்தனா

புத்த வந்தனா

பிக்கு அஸ்வகோஷ், பகவன் புத்தர், பாபாசாகேப் அம்பேத்கர்

மறைந்த ஜெயராஜ் அவர்களுடைய நினைவிடத்தில்  மாலை அணிவித்து மரியாதை

ABI டிரஸ்டின் நிர்வாகி செளந்திரபாண்டியன் பிக்கு பற்றிய நினைவுகளை பகிர்கிறார்

பிக்கு புத்த பிரகாஷ் உடன் நிலாதம்மா குழந்தைகள்



Why Buddhists Chant?

 Why Buddhists Chant?

Buddhist chantings are not like other religious chantings. It is not like Bhajans or slokas were you praise god or superstitions or blindly singing or involving clapping and dancing or accompanied by music instruments. It is not a remorseful action or prayer. It is not a religious duty. It is not done for gaining magical powers or supernatural powers. It is not for gaining benefits from god or from supernatural power. It is not to show off your knowledge and talents to others.
Buddhist Chanting is a reverential action practised for calming the mind, develop concentration, create spiritual energy, invoke positive emotions, provide confidence, and instil courage, overcome our ego, and cultivate spiritual discipline in our life. During the time of Buddha, chanting such as paritta (Protective), Ovada (advisory), Udana (Inspirational), Sajjhaya (Memorisation) were  practised. It is purely psychological and spiritual action for transforming our mind into a higher state of consciousness. Sadhu Sadhu Sadhu!
🪷🪷🪷
With metta,
Dhammamitra Gauthama Prabhu N

ஏன் பௌத்தர்கள் பாராயணம் அல்லது துதி பாடுதல் செய்கிறார்கள்?

பௌத்த பாராயணம் மற்ற மத பாராயணம் அல்லது துதி பாடுதல் மந்திரங்களைப் போல அல்ல. இது கடவுளைப் புகழ்ந்து பாடும் பஜனை அல்லது ஸ்லோகங்களைப் போன்றது அல்ல, மூடநம்பிக்கைகள் அல்லது கண்மூடித்தனமாகப் பாடுவது அல்லது கைதட்டல் மற்றும் நடனம் ஆடுவது அல்லது இசைக்கருவிகளுடன் கூடியது அல்ல. இது ஒரு வருத்தமான செயல் அல்லது பிரார்த்தனை அல்ல. இது ஒரு மதக் கடமை அல்ல. இது மந்திர சக்திகள் அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளைப் பெறுவதற்காக செய்யப்படுவதில்லை. இது கடவுளிடமிருந்து அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியிலிருந்து நன்மைகளைப் பெறுவதற்காக அல்ல. இது உங்கள் அறிவையும் திறமையையும் மற்றவர்களுக்குக் காட்டுவதற்காக அல்ல.


பௌத்த பாராயணம் என்பது மனதை அமைதிப்படுத்தவும், மனத்தை ஒருமுகப்படுத்துதல் செய்வதர்த்துக்கு, ஆன்மீக ஆற்றல் உருவாக்கவும், நேர்மறை உணர்ச்சிகளைத் தூண்டவும், நம்பிக்கையை வழங்கவும், தைரியத்தை வளர்க்கவும், நமது அஹங்காரத்தை மற்றும் அகந்தை வெல்லவும், நம் வாழ்க்கையில் ஆன்மீக ஒழுக்கத்தை வளர்க்கவும் பயிற்சி செய்யப்படும் ஒரு மரியாதைக்குரிய செயலாகும். புத்தர் காலத்தில், பரித்த (பாதுகாப்பு), ஓவாத (ஆலோசனை), உதான (ஊக்கமளிக்கும்), சஜ்ஜாய (மனப்பாடம்) போன்ற பௌத்த பாராயணம் நடைமுறையில் இருந்தன. இது நமது மனதை உயர்ந்த உணர்வு நிலைக்கு மாற்றுவதற்கான முற்றிலும் உளவியல் மற்றும் ஆன்மீக செயலாகும். சாது சாது சாது!

🪷🪷🪷
மெட்டாவுடன்,
தம்மமித்ர கௌதம பிரபு என்

பெளத்தம் ஏற்பு (15.08.2025 வெள்ளி)

 
பெளத்தம் ஏற்பு 15.08.2025 வெள்ளி


அரசியல் விடுதலை பெற்ற ஆகஸ்ட் 15 அன்று சமூக விடுதலை பெறுவதற்காக பெளத்தம் ஏற்பு நிகழ்வினை நிலாதம்மா ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வானது பல்லாவரம் என்றழைக்கப்படும் பல்லமலை மீது அமைந்துள்ள அருள்நிலை புத்தவிஹாரில் நடைபெற்றது.

நிகழ்வானது மாலை 06 மணி அளவில் ஆரம்பம் ஆனது. நிகழ்வினை நிலாதம்மாவின் தலைமைக்குழு உறுப்பினர்களில் ஒருவரான உபாசகி பிரியா தொகுத்து வழங்கினார்.  பெளத்த வாழ்வின் அடிப்படை குறித்து எடுத்துக் கூறினார். பெளத்தமேற்ற குடும்பங்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஏற்கனவே பெளத்தமேற்ற குடும்பங்களின் உறுப்பினர்கள் தங்களது பெளத்த வாழ்வியல் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

குறிப்பாக, நிலாதம்மா தலைமைக்குழு உறுப்பினர் அனுசுயா பேசுகையில் “பெளத்த வாழ்வியலில் மெழுகுவர்த்தி ஏத்துவது, ஊதுவத்தி கொழுத்துவது, பூக்கள், பழங்கள் வைப்பது எல்லாம் விமர்சனமாக பார்க்கப்படுகிறது. இங்கே எதுவும் கட்டாயமில்லை. ஆனால், சில விசயங்களை நாம் அறிவியலோடும் உளவியலோடும் உடன்பட்டு தான் செய்யப்படுகிறது. நிலையாமையை குறிப்பதற்கும், உனக்கு நீயே ஒளியாக இரு என்பதற்கும் இவையெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்று விளக்கம் அளித்தார்.

நிலாதம்மாவின் தலைமைக்குழு உறுப்பினர்களில் ஒருவரான உபாசகி சுமதி பேசுகையில் “இயல்பாகவே கடவுள் நம்பிக்கை இல்லாத எனக்கு, தாலியின் மீதெல்லாம் பெரிய செண்டிமெண்ட் இல்லை. ஆனால் தாலி போடாமல் இருப்பதை அடிக்கடி யாராவது குறிப்பிட்டு பேசும் போது, என்னையவே அறியாமல் என் கணவருக்கு எதாவது ஆகி விடுமா என்ற எண்ணம் முன்னொரு காலத்தில் இருந்தது. கூடுவாஞ்சேரி பெளத்த மாநாட்டில் பெளத்தமேற்ற பிறகு எனக்கு அந்த பயமெல்லாம் சுத்தமாகப் போய் விட்டது. என் கணவர் இலக்கியனும் பெளத்த வாழ்வினை நம்பி கடைப்பிடிப்பதால் எங்களது குடும்பம் பெளத்த வாழ்வியலை பின்பற்றும் குடும்பமாகவே உள்ளது” என்றார்.

நிலாதம்மாவின் தலைமைக்குழு உறுப்பினர்களில் ஒருவரான உபாசகி கோகிலா பேசுகையில் “பெளத்தம் என்பது முழுமையான விழிப்புணர்வோடு இருத்தல், நமது சொல்லில் செயலில் எந்த அளவிற்கு நாம் விழிப்புணர்வோடு இருக்கிறோமோ அதன் வழியாகவே நமக்கு வாழ்வியல் மீதான அனுபவம் கிட்டும், பெளத்த வாழ்வியலில் இது ஒரு முக்கிய கூறாக இருக்கிறது” என்றார்.

விஹாரின் நிர்வாகிகளில் ஒருவரான மூத்த உபாசகர் அய்யா பேசும் போது “நிலாதம்மா குழுவினர் இங்கே வரப்போகிறார்கள் என்றதுமே எங்களுக்குள் ஒரு மகிழ்ச்சி தொற்றிக்கொள்ளும், கிட்டத்தட்ட ஒரு கல்யாணத்தை கொண்டாடப் போகிற மனநிலைக்கு வந்து விடுவோம், தொடர்ச்சியாக அவர்கள் எப்போதும் வந்து இங்கே இந்த இடத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நாம் அதற்கு உறுதுணையாக இருப்போம்” என்றார்.

நிகழ்வில் பெளத்தமேற்றவர்கள் மனதளவில் விடுதலை அடைவதற்கும், இந்து மதம் தன்னை நடத்துகிற படிநிலைகளிலிருந்தும் மீள்வதற்காகவே பெளத்தம் ஏற்க வந்தோம், ஏற்ற பிறகு கிடைக்கிற மன உணர்வு அலாதியான மகிழ்ச்சியை மன நிறைவை உண்டு பண்ணுகிறது என்று தங்களுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

நிலாதம்மாவின் தலைமைக்குழு உறுப்பினர்களில் ஒருவரான உபாசகி சங்கீதா மாணவர்கள் வரைந்த பெளத்தம், அம்பேத்கரியம் தொடர்பான புகைப்படங்களை காட்சிப்படுத்தியிருந்தார். அது வந்திருந்த பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது. நிலா தம்மா ஒருங்கிணைத்த கடந்த பெளத்தமேற்பு நிகழ்வில் பெளத்தம் ஏற்ற சங்கீதா கவிதை ஒன்றினை வாசித்தார். அது அனைவரையும் நெகிழ்வடையச் செய்தது.

நிகழ்வில்  நிலக்கடலையும், தேநீரும், பழங்களும் தானமாக வழங்கப்பட்டது. பாடல்களை கரும்பிடாரி கலைக்குழு பாடகர்கள் பாடி, பறை இசைத்து மகிழ்வித்தார்கள். நிகழ்வானது இரவு 08 மணி அளவில் நிறைவு பெற்றது.