பௌத்தர்களின் போர் நிறுத்தத்தை முன்னிறுத்திய ஒரு நாள் உண்ணாநிலை போராட்டம்

பௌத்தர்கள் ஒன்று கூடி போர் நிறுத்தத்தை முன்னிறுத்தி ஒரு நாள் உண்ணாநிலை போராட்டம் முன்னெடுக்கப் பட்டது. 18-நவம்பர்-2023 காலை 9:00 மணிக்கு துவங்கிய உண்ணாநிலைப் போராட்டத்தில், நிலா தம்ம குழுவினர், தமிழக சிறுபான்மையினர் குழுவின் உறுப்பினரான பிக்கு மௌரிய புத்தா, சேலம் மாவட்ட சிறுபான்மையினர் மற்றும் பிற்பட்டோர் நலக்குழு உறுப்பினர், வழக்கறிஞர் : R. K. தேவேந்திரன் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட சிறுபான்மையினர் மற்றும் பிற்பட்டோர் நலக்குழு உறுப்பினர், பிரம்மபோதி விஹாரின் பிக்கு மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாலை 5 மணியளவில் பிக்கு அவர்கள் பழச்சாறு கொடுத்து உண்ணா நிலைப்போராட்டத்தை முடித்து வைத்தார்